top of page

ஆழ்மனத்தினைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும், உள்ளம் ஆன்மா மற்றும் இறையாற்றல் என்று பல்வேறு பெயர்களில் கூறுவது...

1.கோவில் முழுதும் கண்டேன்-உயர்

        கோபுரம் ஏறிக் கண்டேன்

        தேவாதி தேவனை யான்-தோழி

        தேடியும் கண்டிலனே.


2. தெப்பக் குளம் கண்டேன்- சுற்றித்

       தேரோடும் வீதி கண்டேன்

எய்ப்பில் வைப்பாம் அவனைத்-தோழி

        ஏழையான் கண்டிலனே.


3. சிற்பச் சிலை கண்டேன்- நல்ல

        சித்திர வேலை கண்டேன்

        அற்புத மூர்த்தியினைத்-தோழி

         அங்கெங்கும் கண்டிலனே


 4. பொன்னும் மணியும் கண்டேன்-வாசம்

     பொங்கு பூ மாலை கண்டேன்

     என்னப்பன் எம்பிரானைத்-தோழி

     இன்னும் யான் கண்டிலனே.


5. தூபம் இடுதல் கண்டேன் தீபம்

      சுற்றி எடுத்தல் கண்டேன்

  ஆபத்தில் காப்பவனைத் தோழி

      அங்கே யான் கண்டிலனே.


6.தில்லைப் பதியும் கண்டேன்-அங்குச்

  சிற்றம் பலமும் கண்டேன்

  கல்லைக் கணிசெய்வோனைத் தோழி

  கண்களால் கண்டிலனே. 


7. கண்ணுக்கு இனிய கண்டு-மனத்தைக்

  காட்டில் அலைய விட்டு

  பண்ணிடும் பூசையாலே-தோழி

  பயனொன் றில்லையடி.


8. உள்ளத்தில் உள்ளான் அடி-அது நீ

      உணர வேண்டும் அடி

   உள்ளத்தில் காண்பாய் எனில்-கோவில்

      உள்ளேயும் காண்பாய் அடி. 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page